search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்றங்களை தடுக்க போலீசார் ரோந்து பணி தீவிரம்
    X

    குற்றங்களை தடுக்க போலீசார் ரோந்து பணி தீவிரம்

    • மாவட்ட காவல்துறை எஸ்பி தொடங்கி வைத்தார்
    • ரோந்து போலீசாரின் செல்போன்களை பெற்று பொதுமக்கள் தகவல் அளிக்க அறிவுறுத்தல்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் நகர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறா வகையில் போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இரு சக்கர வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். போலீசார் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர்களுடன் இரு சக்கர வாகனங்களில் செல்லும் ரோந்து பணியை மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் இருந்து போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், சிறப்பு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள போலீசார், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் எந்தவித குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் ரோந்து பணிபுரிந்தும், சந்தேகப்படும் வகையில் உள்ளவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்தும், நகரில் பூட்டியுள்ள வீடுகள் மற்றும் அதில் வசித்து வருபவர்களின் தகவல்களை சேகரித்தும், வாகன தணிக்கை செய்தும் குற்ற சம்பவங்கள் ஏற்படாத வகையில் திறம்பட செயல்படுவார்கள்.எனவே பெரம்பலூர் நகரப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள், உங்கள் பகுதியில் ரோந்து அலுவல் மேற்கொள்ளும் போலீசாரின் செல்போன் எண்களை பெற்றுக்கொண்டு, தங்கள் பகுதியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் பெரம்பலூர் மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தை 24 மணி நேரமும் 9498100690 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம், என்றார். முன்னதாக கடந்த 10-ந்தேதி பெரம்பலூரில் ஏ.டி.எம். எந்திரத்தில் ஒருவர் விட்டு சென்ற ரூ.10 ஆயிரத்தை ஓட்டல் உரிமையாளர் நல்ல பூவான் என்பவர் எடுத்து உரியவரிடம் ஒப்படைக்குமாறு போலீஸ் நிலையத்தில் கொடுத்து சென்றார். அவரின் செயலை பாராட்டி போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி நல்ல பூவானை நேரில் அழைத்து பாராட்டி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×