என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீன் வலையில் 5 அடி மலைப்பாம்பு
- மீன் வலையில் 5 அடி மலைப்பாம்பு சிக்கியது
- பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பகுதியை சேர்ந்தவர் சிவா. இவர், தனது நண்பர்களுடன் நேற்று மீன் பிடிப்பதற்காக ஏரியில் வலை விரித்து வைத்துள்ளார். அவ்வலையை இழுத்த போது வலை கனமாக இருந்துள்ளது. பெரிய மீன் மாட்டியுள்ளது என நினைத்து வலையை ஆர்வமுடன் இழுத்தனர். ஆனால் மீன் வலையில் மீன் சிக்காமல் சுமார் 5 அடி நீளமுள்ள மலை பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதை தொடர்ந்து அந்த மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Next Story






