என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
4 டன் இரும்பு கம்பிகளை திருடிய 3 பேர் கைது
- 4 டன் இரும்பு கம்பிகளை திருடிய 3 பேரை கைது செய்தனா்.
- குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா்:
பெரம்பலூா் அருகேயுள்ள வி.எஸ். நகரைச் சோ்ந்தவா் நல்லு மகன் வெங்கடாஜலம் (45). இவா், பெரம்பலூா்- அரியலூா் பிரதானச் சாலையில் இரும்புக் கடை வைத்துள்ளாா். சம்பவத்தன்று இவர், இரவு கடையை பூட்டிவிட்டு காலை வந்து பாா்த்தபோது, கடைக்கு வெளியே வைத்திருந்த ரூ. 2.40 லட்சம் மதிப்பிலான சுமாா் 4 டன் இரும்புக் கம்பிகளை காணவில்லை.
இதுகுறித்து வெங்கடாஜலம் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆா். சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா். இந்நிலையில், தனிப்படை போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், இரும்புக் கம்பிகளைத் திருடிய புதுக்கோட்டை மேலராஜ வீதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் ராஜா (39), அகரம்பட்டி, பூசந்துறையைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் முருகேசன் (53), திருக்கோகா்ணம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வீரய்யா மகன் ராஜா (39) ஆகிய மூவரையும் கைது செய்து பெரம்பலூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்