search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    108 ஆம்புலன்ஸ் மூலம் 1¾ லட்சம் பேர் பயன்
    X

    108 ஆம்புலன்ஸ் மூலம் 1¾ லட்சம் பேர் பயன்

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் 1¾ லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • 17 வாகனம் இயக்கப்பட்டு வருகிறது

    பெரம்பலூர்

    2008-ஆம் ஆண்டு தமிழக மக்களின் அவசர மருத்துவ பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சுகள் 17 இயக்கப்பட்டு வருகிறது. இதில் அடிப்படை உயிர் காக்கும் கருவிகள் கொண்ட ஆம்புலன்சுகள் 15-ம், அதி நவீன உயிர்க்காக்கும் வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் ஒன்றும், பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் ஒன்றும் இயக்கப்பட்டு வருகிறது பெரம்பலூர் மாவட்டத்தில் சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மொத்தம் 1 லட்சத்து 68 ஆயிரத்து 800 பேர் பயன்பெற்றுள்ளனர் இதில் பிரசவ தேவைக்காக மட்டும் 36 ஆயிரத்து 904 பேரும், சாலை விபத்துகளில் 28 ஆயிரத்து 324 பேரும், இதர மருத்துவ அவசர தேவைக்காக 1 லட்சத்து 3 ஆயிரத்து 572 பேரும் சேவையை பயன்படுத்தி உள்ளனர். இதில் முக்கியமாக பிரசவத்திற்காக அழைக்கப்பட்டவர்களில் 308 கர்ப்பிணிகளுக்கு அவசர மருத்துவ உதவியாளரின் துரித நடவடிக்கையால் ஆம்புலன்சில் குழந்தையை பிரசவத்துள்ளனர். மேலும் பிரசவ அவசர அழைப்புக்காக அழைக்கப்பட்டவர்களில் அவசர மருத்துவ உதவியுடன் 318 கர்ப்பிணி தாய்மார்கள், அவர்களது இல்லங்களிலேயே குழந்தையை ஈன்றெடுத்துள்ளனர். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பெரம்பலூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் மேலாளார் அறிவுக்கரசு தெரிவித்தார்."

    Next Story
    ×