search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம்
    X

    108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம்

    • 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
    • பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    பெரம்பலூர்,

    108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூரில், நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாபு தலைமை தாங்கினார். பொதுமக்கள் நல்லுறவு கமிட்டி ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். பொருளாளர் வெங்கடேசன் சங்கத்தின் நிதி நிலை அறிக்கையை வாசித்தார். சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ஆனந்தராஜ் சிறப்புரையாற்றினார். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவின் படி ஆம்புலன்ஸ் நிர்

    வாகம் உடனடியாக பணி வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வழக்கம் போல் சதவீத அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் முறையாக வார விடுமுறை வழங்கப்பட வேண்டும். தற்பொழுது வழங்கப்பட்ட பணி வரையறை அட்டவணைப்படி தொழிலாளர்களை அழைக்கழிக்காமல் நாளுக்கு ஒரு லொகேஷன் என்று மாறி மாறி பணி வழங்குவதை கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு முன்பாகவே அதாவது கடைசி நேரத்தில் எந்த இடத்தில் பணி என்பதை கூறாமல், உரிய நேரத்தில் பணி மாவட்ட அதிகாரிகளால் கூற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமையில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

    Next Story
    ×