என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமுளி அருகே குடியிருப்பில் சுற்றும் கரடியை பிடிக்க மக்கள் வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்

    குமுளி அருகே குடியிருப்பில் சுற்றும் கரடியை பிடிக்க மக்கள் வலியுறுத்தல்

    • குமுளி குடியிருப்பு பகுதியான கட்டப்பள்ளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாலையில் கரடி ஒன்று புகுந்தது.
    • குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி புகுந்து மிரட்டி வரும் கரடியை பிடிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    கூடலூர்:

    தமிழக - கேரள எல்லையில் உள்ள குமுளி குடியிருப்பு பகுதியான கட்டப்பள்ளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாலையில் கரடி ஒன்று புகுந்தது. இதனை அங்குள்ள வியாபாரி சஜன் பார்த்து கூச்சலிட்டார். இதனை யடுத்து பொதுமக்கள் ஒன்று திரண்டு கரடியை விரட்டினர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது கரடி அங்கிருந்து சென்று விட்டது.

    மறு நாள் குமளி பஞ்சாயத்து மீன் மார்க்கெட் பின்புறம் மீண்டும் கரடி புகுந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இருந்தபோதும் கரடி பிடிபடவில்லை. அட்டப்ப ள்ளம், ஹரிதா நகர் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர். இது குறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில், குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி புகுந்து மிரட்டி வரும் கரடியை பிடிக்க ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம். வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்ததாக இருக்கலாம். பொதுமக்கள் தெரிவித்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கரடி நடமாட்டம் உறுதி யானால் அதைப் பிடிக்க கூண்டு வைக்கப்படும் என்றனர்.

    Next Story
    ×