என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வண்ணம் உருவாகியுள்ள புகை.
குஜிலியம்பாறை அருகே தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கரும்புகையால் மக்கள் அவதி
- ஆலம்பாடி, மல்லப்புரம் உள்ளிட்ட கிராமங்களில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் கொட்டாங்குச்சிகளை எரித்து கரி தயாரித்து வருகின்றனர்.
- கரும்புகை வெளியாகி பொதுமக்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே ஆலம்பாடி, மல்லப்புரம் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் கொட்டாங்குச்சிகளை எரித்து கரி தயாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து எரிக்கப்படும் கொட்டாங்குச்சிகளால் கரும்புகை வெளியாகி பொதுமக்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. மேலும் நிலம் மற்றும் நீர், காற்றுமாசு ஏற்படுகிறது. எனவே இதனை தடைசெய்ய வேண்டும் என மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் பொதுமக்கள் பல்வேறு நோய்தொற்றுக்கு ஆளாகும் நிலை உள்ளது. எனவே இதற்கு தீர்வுகாணவேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story






