search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள்  சமூக வலைதள புகார் மையத்தில் புகார் அளிக்கலாம்  பகலவன் எஸ்.பி. வேண்டுகோள்
    X

    கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் சமூக வலைதள புகார் மையத்தில் புகார் அளிக்கலாம் பகலவன் எஸ்.பி. வேண்டுகோள்

    • புகார் மையத்தை பொதுமக்கள் முழுவதுமாக பயன்படுத்தி தங்கள் பகுதியில் நடக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பொதுமக்களின் தேவை வலைதள புகார் மையத்தை தொடங்கியுள்ளார்.

    பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிகழக்கூடிய சட்டவிரோதமான செயல்கள் பற்றிய தகவல்களை, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் சமூக வலைதள வதந்திகள் உள்ளிட்ட வைகளை பற்றி காவல்துறை சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த சமூக வலைதள முகநூல், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் வாட்ஸ்அப் எண் 7358154100 ஆகியவற்றில் புகார் தெரிவிக்கலாம்.

    இந்த புகார் மையத்தை பொதுமக்கள் முழுவதுமாக பயன்படுத்தி தங்கள் பகுதியில் நடக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

    இதில் புகார் தெரிவிப்பவர்களின் தகவல்கள் இரகசியமாக பாதுகாக்கப்படும். மேலும் சமூக வலைதள கணக்கு மற்றும் வாட்ஸ்அப் எண்ணுக்கு வரும் புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் அறிவுரை வழங்கியுள்ளார்.

    Next Story
    ×