search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலை மறியல்
    X

    குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

    குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலை மறியல்

    • பொதுமக்கள் தங்கள் பகுதியில் 2 நாட்களுக்கு ஒரு முறை ஒரு மணிநேரம் மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது.
    • தஞ்சை-திருச்சி சாலை பெரியார் சிலை அருகில் திடீர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

    வல்லம்:

    தஞ்சை அருகே வல்லத்தில் உள்ள சவேரியார் கோவில் தெரு, பெரியார் நகர், இந்திரா நகர், அம்பேத்கர் நகர், அகிலாங்கரை மேட்டு தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் 2 நாட்களுக்கு ஒரு முறை ஒரு மணிநேரம் மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதை மாற்றி தினமும் குடிநீர் வழங்க வேண்டும்.

    பாதாள சாக்கடைப்பணிகளை தரமான முறையில் அனைத்து தெருக்களுக்கும் அமைத்து இரு புறமும் வடிகால் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்ேவறு அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் அதிகமான பொது மக்கள் வல்லத்தில் தஞ்சை - – திருச்சி சாலை பெரியார் சிலை அருகில் திடீர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து தகவலறிந்த வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யா ணசுந்தரம், பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்த நாயகி, வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது பொது மக்கள் தங்கள் கோரிக்கை கள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தால் மட்டுமே சாலைமறியல் விலக்கி கொள்வோம் என்று தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×