search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால பணி வரைபட ஒப்புதலை வழங்காத ரெயில்வே துறை- பொதுமக்கள் அதிர்ச்சி
    X

    பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால பணி வரைபட ஒப்புதலை வழங்காத ரெயில்வே துறை- பொதுமக்கள் அதிர்ச்சி

    • நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் இடது புற பகுதியில், போக்குவரத்து தடைபடாமல் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.
    • தென்காசி செல்லும் இடதுபக்க பகுதியில் இரு வழிக்கான பாலம் முழுமையாக தொடங்கப்பட்டு வேலை நடைபெற்று வருகிறது.

    தென்காசி:

    நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை திட்டமானது ரூ. 430.71 கோடிகள் மதிப்பீட்டில் உலக வங்கி மற்றும் தமிழக அரசு நிதியில் செயல்படுத்தப்ப டுகிறது.

    ரெயில்வே மேம்பாலம்

    போக்குவரத்து அதிகம் நெருக்கடி கொண்ட பாவூர்சத்திரம் ரெயில்வே கேட்டில் மேம்பால பணிகள் தொடங்கி கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலம் 900 மீட்டர் நீளமும் 20மீட்டர் அகலமும் கொண்டது. இடது புறம் 22 பில்லர்களும், வலது புறம் 22 பில்லர்களும் சேர்ந்து மொத்தம் 44 பில்லர்களுடன் இந்த பாலம் அமைக்கப்படுகிறது.

    தற்போது நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் இடது புற பகுதியில், போக்குவரத்து தடை படாமல் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தண்டவாளத்திற்கு கிழக்கு பகுதியில் 13 பில்லர்களும், மேற்கு பகுதியில் 9 பில்லர்களும் அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.

    மாநில நெடுஞ்சாலைத்துறை

    தென்காசி செல்லும் இடதுபக்க பகுதியில் இரு வழிக்கான பாலம் முழுமை யாக தொடங்கப்பட்டு வேலை நடைபெற்று வருகிறது. தூண்களுக்கான அடித்தளம் அமைத்து, வட்ட வடிவிலான பில்லர் கான்கிரீட் மீது பாலம் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

    பொதுவாக தண்ட வாளத்திற்கு மேலே அமைய இருக்கும் பால பகுதிகளை ரெயில்வேதுறை செய்து வந்த நிலையில் பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால பணிகளை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறையே செய்து வருகிறது.

    வரைபடம்

    இது குறித்து குறும்பலா பேரியை சார்ந்த ராஜசேகர பாண்டியன் என்பவர் எழுத்து பூர்வமாக கேட்ட கேள்விக்கு நெடுஞ்சாலைதுறை அளித்த பதிலில், "பாவூர்சத்திரத்தில் அமைக்கப்படும் ரெயில்வே மேம்பாலத்தின் ரெயில்வே பகுதிக்கான வரைபடம், மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் ரெயில்வே பகுதியில் வேலை தொடங்கப்படும் என்று தெரிவிக்க ப்பட்டுள்ளது."

    இது குறித்து ராஜசேகர பாண்டியன் கூறியதாவது:- ரெயில்வே துறையின் அலட்சியம் காரணமாக பல்வேறு இடங்களில் ரெயில்வே மேம்பாலங்கள் தண்டவாளத்திற்கு மேற்பகுதியில் அந்தரத்தில் தொங்குகின்றன. பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பாலத்தை பொறுத்த வரை ரெயில்வே துறைக்கும், நெடுஞ்சாலை துறைக்கும் போதிய புரிந்துணர்வு, ஒருங்கி ணைப்பு இல்லை.

    வாகனங்கள் அணிவகுப்பு

    தற்போது ரெயில்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் ரெயில்வே கேட் அதிக முறை மூடப்படுவதோடு, வாகனங்கள் இருபுறமும் கிலோ மீட்டர் கணக்கில் அணிவகுத்து நிற்கின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா இதுகுறித்து கூறுகையில், சென்னையில் உள்ள ரெயில்வே முதன்மை பால பொறியாளரிடம், மதுரை ரெயில்வே கோட்ட பொறியாளரிடமும் பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால வரைபட அனுமதியை உடனடியாக வழங்குமாறு கோரிக்கை வைத்தோம். அதற்கு அவர்கள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் வரைபடங்களை வழங்காமலும் போதிய கால அவகாசம் தராததாலும் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் நாங்கள் கேட்கும் கூடுதல் தகவல்களையும் உடனடியாக வழங்கினால் வரைபட ஒப்புதல் வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம் என்றனர்.

    எனவே தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக ரெயில்வே துறைக்கு பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால வரைபடம் சம்பந்தமான போதுமான தகவல்களையும் கொடுத்து குறித்த நேரத்தில் ஒருங்கி ணைப்பு செய்து பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×