search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரி சிவன் கோவிலில் பத்ர தீப விழா
    X

    கோவிலில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டபோது எடுத்த படம்.


    ஆறுமுகநேரி சிவன் கோவிலில் பத்ர தீப விழா

    • ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு பத்ர தீப விழா நடைபெற்றது.
    • சுவாமி, அம்பாள் சன்னதிகளிலும் பரிவார மூர்த்திகளின் சன்னதிகளிலும் பக்தர்களால் பத்ர தீபம் ஏற்றப் பட்டது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு பத்ர தீப விழா நடைபெற்றது.

    விழாவில் நேற்று மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் சன்னதிகளிலும் பரிவார மூர்த்திகளின் சன்னதிகளிலும் பக்தர்களால் பத்ர தீபம் ஏற்றப் பட்டது. தொடர்ந்து பெண் அடியார்கள் என்ற தலைப்பில் திருமணி சொற்பொழிவு ஆற்றினார்.

    சிறப்பு வழிபாட்டினை அய்யப்ப பட்டர் நடத்தினார். மண்டகப்படிதாரர் காமராஜ், திருவாசக முற்றோதுதல் குழுவினர், பக்த ஜன சபை சார்பில் தெரிசை அய்யப்பன், தங்கமணி மற்றும் திர ளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு களை கோவில் மணியம் சுப்பையா செய்திருந்தார்.

    Next Story
    ×