search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் பகுதி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
    X

    பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சாமி, வடகரையாத்தூர் ஸ்ரீதேவி பூதேவி உடனுரை அஞ்சலென்ற பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

    பரமத்திவேலூர் பகுதி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

    • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • சாமிக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகாவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சாமிக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதேபோல் பரமத்தி வேலூரில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவில், அனிச்சம்பா ளையத்தில் உள்ள பெரு மாள் கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள பெருமாள் கோவில், பரமத்தியில் உள்ள

    கோதண்டராம சுவாமி கோவில், வடகரை யாத்தூரில் உள்ள தேவி பூதேவி உடனுரை அஞ்சலென்ற பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×