என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரூர் பகுதியில் பங்குனி உத்திர திருவிழா
- 2 பேர் எலுமிச்சம்பழம் உடல் முழுவதும் குத்திக்கொண்டு வந்திருந்தனர்.
- சுற்றுபுற கிராம பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில் பங்குனி உத்திர விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. அரூர் அடுத்த கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டியில், உள்ள ஸ்ரீ முருகர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.
இதில் பக்தர்கள் அலகு குத்தி கொண்டு முதுகில் பொக்லின், வேன், டெம்போ, உரல் இழுத்தல் போன்ற வற்றை நேர்த்தி கடனாக நிறைவேற்றினார்கள்.
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சுமார் 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் விதவிதமாக அலகு குத்தி கொண்டும், காவடி எடுத்தும் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்தனர்.
பக்தர்கள் சிலரை சுவாமிக்கு முன்பு படுக்க வைத்த நெஞ்சின் மேல் உரல் வைத்து மஞ்சள் போட்டு உலக்கையால் இடித்து தூளாக்கி பக்தர்களுக்கு கொடுத்தனர். 2 பேர் எலுமிச்சம்பழம் உடல் முழுவதும் குத்திக்கொண்டு வந்திருந்தனர்.
இது போன்ற பல விதமான நேர்த்தி கடன்களை செலுத்தியது பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைத்தது. விழாவில் கெளாப்பாறை, கீரைப்பட்டி, நாதியானூர், கம்மாளம்பட்டி, வேப்பம்பட்டி, பொன்னேரி உள்பட சுற்றுபுற கிராம பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா வெங்கட்ரா மன், சண்முகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். காலை முதல் மாலை அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்