search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆத்தூர் சோமநாத சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா- கொடியேற்றத்துடன் தொடக்கம்
    X

    கொடிமரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்ட காட்சி.

    ஆத்தூர் சோமநாத சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா- கொடியேற்றத்துடன் தொடக்கம்

    • நாளை சோமாஸ்கந்தர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • 10-ம் திருநாளான (செவ்வாய் கிழமை) திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது.

    ஆத்தூர்:

    ஆத்தூர் சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பங்குனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    2-ம் திருநாளான நாளை (திங்கட்கிழமை) சோமாஸ்கந்தர் புறப்பாடும், 4-ம் நாளான (புதன்கிழமை) சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் புறப்பாடும் நடைபெறுகிறது.

    பங்குனி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 7-ம் திருநாளான (சனிக்கிழமை) அதிகாலை நடராஜர் அபிஷேகமும், அதிகாலை 4.15 மணிக்கு நடராஜர் உருகு சட்டசேவையும், இரவு 9 மணிக்கு நடராஜர் முதலாம் கால ருத்ர அம்ச சிவப்பு சாத்தியும், 8-ம் திருநாளான (ஞாயிற்றுகிழமை) அதிகாலை 6.30 மணிக்கு நடராஜர் 2-ம் கால பிரம்ம அம்ச வெள்ளை சாத்தியும், பிற்பகல் 2 மணிக்கு 3-ம் கால விஷ்ணு அம்ச பச்சை சாத்தியும் நடைபெறுகிறது.

    10-ம் திருநாளான (செவ்வாய் கிழமை) காலை 8 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர் ஹரிஹரசுப்ரமணிய பட்டர், மணியம் அய்யப்பன், ஆத்தூர் பேரூராட்சி தலைவர் கமால்தீன், மேலாத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார், மண்டகப்படிதாரர் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார், ஜோதிடர் ராஜாமணி, அ.பி.வை.அண்ணாமலை, சுப்ரமணியன் மற்றும் தேவஸ்தான நிர்வா கத்தினர், மண்டகப்ப டிதாரர்கள் மற்றும் உபய தாரர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×