search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
    X

    வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.

    வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

    • வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவர் தலைமையில் நடந்தது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய குழுத்தலைவர் பரமேஸ்வரி முருகன் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் உதயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய குழு துணைத்தலைவர் முத்து வரவேற்றார். இளநிலை உதவியாளர் சடையாண்டி தீர்மானங்களை வாசித்தார். ரெங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சி சேடபட்டியில் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கழிவு நீர் வாய்க்கால் கட்டுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரவடிவேல், உதவி பொறியாளர்கள் டெல்லி ராஜா, ஜான் பிரிட்டோ, ஒன்றிய கவுன்சிலர்கள் விஜயகர், சக்திவேல், அறிவி, பிச்சை, ஜீவகன், செல்லம்மாள், பெனினா தேவி, சூசை ரெஜி, முருக பாரதிஉள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இளநிலை உதவியாளர் நாச்சியப்பன் நன்றி கூறினார்.

    Next Story
    ×