என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாளையங்கோட்டை அருகே ஆன்லைன் ரம்மியில் பல லட்சம் இழந்த டிரைவர் தற்கொலை
- ஆறுமுக கனிக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
- சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரி அருகே உள்ள மேலபாலாமடை பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் மகன் ஆறுமுக கனி (வயது 33). டிரைவரான இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
ஆறுமுக கனிக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டின் பெயரிலும், சுய உதவி குழுவிலும் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.
ஆனால் அதில் தொடர்ந்து பணத்தை இழந்த நிலையில் பல லட்ச ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. இதை அவரது குடும்பத்தினர் கண்டித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஆறுமுககனி திடீரென விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுக கனி நள்ளிரவு இறந்தார்.
இது குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் ரூபாய் இழந்து கடனானதால் விரக்தியில் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






