search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி : மலைக்கோவிலில் 3-வது மின் இழுவை ரெயிலில் 2 பெட்டிகள் இணைத்து சோதனை
    X

    சோதனை ஓட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    பழனி : மலைக்கோவிலில் 3-வது மின் இழுவை ரெயிலில் 2 பெட்டிகள் இணைத்து சோதனை

    • 2 மின் இழுவை ரெயில்கள் செயல்படும் நிலையில் 3-வது மின் இழுவை ரெயிலுக்கான 2 பெட்டிகள் ரூ.1 கோடி மதிப்பில் சென்னையில் தயாரிக்கப்பட்டது.
    • பணிகள் நிறைவு பெற்றபின் நிபுணர்கள் ஆய்வுக்குப் பிறகு மீண்டும் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க வருகின்றனர். இந்நிலையில் மலைக்கோவில் சென்று வர மின் இழுவை ரெயில், ரோப்கார், படிப்பாதை பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2 மின் இழுவை ரெயில்கள் செயல்படும் நிலையில் 3-வது மின் இழுவை ரெயிலுக்கான 2 பெட்டிகள் ரூ.1 கோடி மதிப்பில் சென்னையில் தயாரிக்கப்பட்டது.

    குளிர்சாதன வசதி, கண்காணிப்பு கேமரா வசதி உள்ளிட்ட பலதரப்பட்ட வசதிகள் கொண்ட இந்த பெட்டிகள் தலா 3.6 டன் எடையுடையது. சில மாதங்களுக்கு முன்பு இந்த பெட்டிகளை இணைத்து சோதனை செய்யப்பட்ட நிலையில் முதல் பெட்டியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து 2 பெட்டிகள் இணைக்கப்பட்டு தற்போது சோதனை செய்ய ப்பட்டது. புதிய பெட்டி களுக்கு ஏற்றாற்போல் பிளாட்பாரமும் மாற்றிய மைக்கப்படுகிறது. இதன் பணிகள் நிறைவு பெற்றபின் நிபுணர்கள் ஆய்வுக்குப் பிறகு மீண்டும் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

    இதற்கு முன் படிப்படி யாக எடை அதிகரித்து மின் இழுவை ரெயிலை இயக்கி சரிபார்க்கப்படும். சோதனை ஓட்டத்துக்கு பின்பு நிபுணர்கள் ஒப்புதல் பெற்று பக்தர்கள் பயன்பா ட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது.

    Next Story
    ×