என் மலர்
உள்ளூர் செய்திகள்

பழங்கரையில் 10-ந்தேதி மின்தடை
- பழங்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் 10-ந் தேதி நடக்கிறது.
- மகாலட்சுமி நகர், முல்லை நகர், தன்வர்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
அவினாசி:
தமிழ்நாடு மின்சார வாரியம் அவினாசி மின்பகிர்மான அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பழங்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் 10-ந் தேதி நடக்கிறது. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பழங்கரை, அவினாசி லிங்கம் பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், விஸ்வ பாரதி பார்க், தேவம் பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ராம் நகர், நல்லி கவுண்டம் பாளையம், கைகாட்டி புதூர் ஒரு பகுதி,
ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன் நகர், ஆர்.டி.ஓ. அலுவலகம், கமிட்டியார் காலனி, குளத்துப் பாளையம், வெங்கடாசலபதி நகர், துரைசாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி.வி. நகர், திருநீலகண்டர் வீதி, நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர். நகர், மகாலட்சுமி நகர், முல்லை நகர், தன்வர்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






