என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம தேவதைகளின் பல்லக்கு உற்சவம்
    X

    கிராம தேவதைகளின் பல்லக்கு உற்சவம்

    • 7 கிராம தேவதைகள், மாரசந்திரம் கிராமத்திற்கு பக்தர்களால் பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
    • திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேள, தாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் விழா நடைபெற்றது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட மாரச்சந்திரம் கிராமத்தில், விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய், நொடியின்றி வாழவும், கிராம தேவ தைகளுக்கு 4 ஆண்டுக்கு ஒருமுறை சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம்.

    நேற்று முன்தினம் இரவு லக்கசந்திரம், தேர்பேட்டை, மாரச்சந்திரம், தொட்டி, தேன்கனிக்கோட்டை, ஜார்க்கலட்டி, திம்ம சந்திரம் ஆகிய 7 கிராமங்களில் இருந்து மாரியம்மன், முத்தாலம்மன், முத்தப்பா, பாலகுளி மாரியம்மா, செல்லாபுரியம்மா கங்கம்மா, லக்கசந்திரம் மாரியம்மன் ஆகிய 7 கிராம தேவதைகள், மாரசந்திரம் கிராமத்திற்கு பக்தர்களால் பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

    தொடர்ந்து கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பக்தர்கள் கிராம தேவதைகளை பல்லக்கில் சுமந்துசென்று, அக்னி குண்டத்தில் இறங்கினர்.

    திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேள, தாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் விழா நடைபெற்றது.இதில் தேன்கனிகோட்டை பகுதி சுற்றியுள்ள பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

    Next Story
    ×