search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் விளைச்சல் அமோகம்-அறுவடைக்கான ஏற்பாடுகள் மும்முரம்
    X

    கோப்பு படம்

    தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் விளைச்சல் அமோகம்-அறுவடைக்கான ஏற்பாடுகள் மும்முரம்

    • தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் விளை ச்சல் அமோகமாக உள்ள தால், அறுவடைக்கான ஏற்பாடுகள் மும்முரமடை ந்துள்ளன.
    • பெரியாறு அணை மூலம் தண்ணீர் போதுமான அளவு கிடைப்பதால், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் நெல் விளைச்சல் இந்த ஆண்டும் திருப்திகரமாக உள்ளது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் விளை ச்சல் அமோகமாக உள்ள தால், அறுவடைக்கான ஏற்பாடுகள் மும்முரமடை ந்துள்ளன. விளைச்சல் திருப்திகரமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தேனி மாவட்டம் லோயர் கேம்ப் முதல் பழனிசெட்டி பட்டி வரை இருபோக நெல் சாகுபடிநடைபெற்று வருகிறது. 14,707 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வரும் விவசாய பணிக்கு, முல்லை பெரியாறு அணை யிலிருந்து கடந்த ஜூன் மாதம் தண்ணீர் திறக்க ப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து தலை மதகு விவசாயப் பகுதியான கூடலூரிலிருந்து கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், மார்க்கை யன்கோட்டை, வீரபாண்டி என அடுத்தடுத்து விவசாய பணிகள் தொடங்கின. தனியே நாற்று பாவி பின்பு வயல்களில் நடவு செய்ய ப்பட்டன.

    நடவு செய்ய ப்பட்ட இந்த நாற்று கள் தற்போது நெல்மணி களுடன் திரட்சியாக காட்சி அளிக்கின்றன. வழக்கம்போல் இந்த ஆண்டும் நெல் விளைச்சல் நன்றாக உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மார்க்கையன்கோட்டை, க.புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நெற்பயிர்கள் அறுவடை பருவத்தை எட்டியுள்ளன. இன்னும் சில வாரங்களில் அறுவடைப் பணிகள் தொடங்க உள்ளன.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பெரியாறு அணை மூலம் தண்ணீர் போதுமான அளவு கிடைப்பதால், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் நெல் விளைச்சல் இந்த ஆண்டும் திருப்திகரமாக உள்ளது. சில இடங்களில் நீர் திறப்புக்கு முன்பாகவே நடவுப்பணிகள் மேற்கொ ள்ளப்பட்டன. இதனால் குச்சனூர் உள்ளிட்ட பகுதிகளில் முன்னதாகவே அறுவடை தொடங்க வாய்ப்புள்ளது என்றனர்.

    Next Story
    ×