search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்ட விவசாயிகளிடம் பயோ மெட்ரிக் முறையில் நெல் கொள்முதல் செய்யப்படும்: கலெக்டர் அருண்தம்புராஜ் தகவல்
    X

    கடலூர் மாவட்ட விவசாயிகளிடம் பயோ மெட்ரிக் முறையில் நெல் கொள்முதல் செய்யப்படும்: கலெக்டர் அருண்தம்புராஜ் தகவல்

    • விரல் ரேகை பதிவு செய்யும் முறை புதிதாக கடந்த 1-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது.
    • நெல் காலதாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்ய முடியும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கடலூர் மண்டலத்தில் நடப்பு பருவத்துக்கு நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3-ம் பருவ நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களிலும் விவசாயிகள் தங்கள் நெல்லினை விற்பனைக்காக இணைய வழியில் பதிவு செய் யும்போது பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்யும் முறை புதிதாக கடந்த 1-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது.

    விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக் கருவி பொருத்தி விரல் ரேகை பதிவு செய்வதன் மூலம் நெல் வியாபாரிகள் உள் நுழையாமல் தடுப்பதுடன் விவசாயிகள் மட்டும் பயன்பெறும் வகையில் நெல் காலதாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்ய முடியும். பயோ மெட்ரிக் கருவி பொருத்தி விரல் ரேகை பதிவு செய்வதன் மூலமும், ஆதார் எண்ணில் பதிவு செய்திருக்கும் செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. பெறு வதன் மூலமும் விவசாயி களின் விவரத்தை துல்லிய மாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்த விரல் ரேகை பதிவு மூலம் விவசாயி களின் சுய விவரங்கள் சரியாக இருக்கிறதா? என கொள்முதல் நிலை யங்களிலேயே சரிபார்த்துக் கொண்டு நெல்லினை விற்பனை செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×