search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் ஓசோன் தினம் கடைபிடிப்பு
    X

    கிருஷ்ணகிரியில் ஓசோன் தினம் கடைபிடிப்பு

    • ஓசோன் படலத்தை பாதுகாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பன்னாட்டு ஓசோன் தினம் கிருஷ்ணகிரியில் கடைபிடிக்கப்பட்டது.
    • கிருஷ்ணகிரியில் ஓசோன் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் மற்றும் தேசிய பசுமைப்படை மன்றங்களின் சார்பில் ஓசோன் தினம் கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி, ஒன்றிய அளவில் நடந்த மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் நடத்தப்பட்டது. இதில் முதலிடம் பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றனர்.

    உலக வெப்பமயமாதலைத் தடுக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும், ஓசோன் படலத்தை பாதுகாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பன்னாட்டு ஓசோன் தினம் கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி நடந்த மாவட்ட அளவிலான போட்டியில், பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள், காற்று மாசுப்படுவதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 560 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி, பள்ளியின் தலைமை ஆசிரியரும், கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளரும் மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×