என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புறக்காவல் நிலையம் திறப்பு
    X

    புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.

    புறக்காவல் நிலையம் திறப்பு

    • 20 இடங்களிலில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
    • சி.சி.டி.வி. கேமராக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் இயக்கி வைத்தார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த ஆவூரில், பொதுமக்கள் நலன் கருதி காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, ஜமாத்தார்கள் மற்றும் இளைஞர்களின் உதவியால் 20 இடங்களிலில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    புதிதாக பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் இயக்கி வைத்தார்.

    தொடர்ந்து, கோவிந்தகுடி ஊராட்சியில் புறக்காவல் நிலையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் திறந்து வைத்தார்.

    விழாவில் நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தமிழ்மாறன், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ராஜா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்பரசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், கணேசன் மற்றும் சிறப்பு காவலர் அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×