search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்
    X

    நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    ஒட்டன்சத்திரம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்

    • கவுன்சிலர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டது முதல் இது நாள் வரை மண் அள்ளும் எந்திரத்திற்காக ரூ.1 கோடிக்கு மேல் செலவாகி உள்ளது.
    • எனவே தீர்மானம் நிறைவேற்றி சொந்தமாக எந்திரம் வாங்கப்படும் என்றார்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் துணை தலைவர் வெள்ளைச்சாமி தலைமையில் நடந்தது. கமிஷனர் மீனா, பொறியாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உத்தேச செலவினம் என்று குறிப்பிடாமல் அதற்குரிய தொகையை குறிப்பிட்ட வேண்டும். இது குறித்து பலமுறை கூட்டத்தில் தெரிவித்த பின்பும் இதுவரை அப்படியே தான் செயல் படுகிறீர்கள் என கவுன்சிலர் கண்ணன் கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதில் அளித்த கமிஷனர் இனிமேல் செலவு தொகை குறிப்பிடப்படும் என்றார். கவுன்சிலர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டது முதல் இது நாள் வரை மண் அள்ளும் எந்திரத்திற்காக ரூ.1 கோடிக்கு மேல் செலவாகி உள்ளது. இதற்கு சொந்தமாக மண் அள்ளும் எந்திரம் வாங்கி இருக்கலாமே என கவுன்சிலர் கண்ணன் கேட்டார். இதற்கு பதில் அளித்த துணைத்தலைவர் கூறுகையில்,

    அமைச்சரும் நகராட்சிக்கு சொந்தமாக மண் அள்ளும் எந்திரம் வாங்க வேண்டும் என கூறியுள்ளார். எனவே தீர்மானம் நிறைவேற்றி சொந்தமாக எந்திரம் வாங்கப்படும் என்றார். கவுன்சிலர் அனைவரும் அவரவர் வார்டுகளுக்கு ட்பட்ட குறைகளை எடுத்துரைத்தனர். இதற்கு பதில் அளித்த கமிஷனர் மீனா நான் இப்போதுதான் பொறுப்பேற்றுள்ளேன். தொடர்ந்து அனைத்து பணிகளும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×