search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரூர் பேருந்து நிலையத்தில் கடைகளை காலி செய்ய உத்தரவு
    X

    அரூர் பேருந்து நிலையத்தில் கடைகளை காலி செய்ய உத்தரவு

    • நவீனப்படுத்தும் வகையில் ரூ.3 கோடியே 62 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • 99 கடைகனையும் காலி செய்ய நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது.

    அரூர்,

    தருமபுரி மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரமான அரூர் பேரூராட்சியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பேருந்துநிலைத்தை விரிவுபடுத்தி நவீனப்படுத்தும் வகையில் ரூ.3 கோடியே 62 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் பேரூந்து நிலையம். தேவையான அனைத்து கடைகளும், நவீன கழீப்பிடங்கள், அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூந்து நிலையத்தில் 99 கடைகனையும் காலி செய்ய நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது.

    பேரூந்து நிலையத்தை நவீன பேரூந்து நிலையமாக மாற்றி அமைக்கும் பணிக்கு நிர்வாக அனுமதி கிடைத்துள்ளது. இதனால் பேரூந்து நிலையத்தில் உள்ள கடையின் ஏலதாரர்கள், தங்களது 2022-2023 ஆண்டுக்கு செலுத்த வேண்டிய முழு தொகையையும் செலுத்தி ரசீது பெற்று கொள்ள வேண்டும்.

    வரும் மார்ச் 15-ந்தேதிக்குள் கடைகளை காலி செய்து பேரூராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும். தவறினால் பேரூராட்சி மூலம் கடைகள் காலி செய்யப்பட்டு நிலுவை தொகைகள் இருப்பின் நீதிமன்ற நவவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×