என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்று திறனாளி வாலிபருக்கு மீண்டும் நிதி வழங்க ஆணை
    X

    மாற்று திறனாளி வாலிபருக்கு மீண்டும் நிதி வழங்க ஆணை

    • உதவித்தொகை நிறுத்தம் செய்யப்பட்டதாக செய்திவெளியானது.
    • ஆணை தனி வட்டாட்சியரால் நேரில் வழங்கப்பட்டது

    தேன்கனிகோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் பெட்டமுகிலாலம் துளுவபேட்டை கிராமத்தில் வசித்து வரும் ருத்திரன் மகன் சுபாஷ் என்பவருக்கு வழங்கப்பட்டு வந்த மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை நிறுத்தம் செய்யப்பட்டதாக 13-ம் தேதியன்று செய்திவெளியானது.

    இது தொடர்பாக, கிருஷ்ணகிரி கலெக்டர் அறிவுரையின்படி பயனாளி சுபாஷ் என்பவர் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி என்பதினால் பெட்டமுகிலாலம், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் தேன்கனிக்கோட்டை தனி வட்டாட்சியர் ஆகியோரின் பரிந்துரையுடன் 15-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மருத்துவ கூறாய்வுக் குழுவின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    பின்னர் மருத்துவரால் தேர்வு செய்யப்பட்டதன் அடிப்படையில், தேன்கனிக்கோட்டை வட்டம், பெட்டமுகிலாலம், துளுவபேட்டை கிராமத்தில் வசித்து வரும் சுபாஷ் என்பவருக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை தேன்கனிக்கோட்டை (சமூக பாதுகாப்புத்திட்டம்) தனி வட்டாட்சியரால் நேரில் வழங்கப்பட்டது என கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மற்றும் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) வேடியப்பன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×