search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை-மேட்டுப்பாளையம் இடையே கூடுதலாக 2 மெமு ரெயில்கள் இயக்கம்
    X

    கோவை-மேட்டுப்பாளையம் இடையே கூடுதலாக 2 மெமு ரெயில்கள் இயக்கம்

    • கோவை-மேட்டுப்பாளையம் இடையே தற்போது 3 முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • ரெயில்கள், கோவை வடக்கு, துடியலூர், பெரியநாயக்கன் பாளையம், காரமடை ெரயில் நிலையங்களில் தலா ஒரு நிமிடம் நின்று செல்லும்.

    கோவை:

    கோவை-மேட்டுப்பாளையம் இடையே தற்போது 3 முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கூடுதலாக 2 ெரயில்கள் இயக்கப்பட உள்ளன.

    இதுகுறித்து சேலம் கோட்ட ெரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை-மேட்டுப்பாளையம் இடையே முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (06814), கோவையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட்டு, நண்பகல் 12.35 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

    மேட்டுப்பாளையம்-கோவை இடையிலான முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (06815), மேட்டுப்பாளையத்தில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்கு புறப்பட்டு 1.50 மணிக்கு கோவை வந்தடையும்.

    இதேபோன்று இரவு கோவை-மேட்டு ப்பாளையம் இடையே முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (06822), கோவையில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு, 9.10 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

    மேட்டுப்பாளையம்-கோவையிலான முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (05823), மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு 8 மணிக்கு கோவை வந்தடையும். இந்த ெரயில்கள் அனைத்தும் இன்று (20-ந் தேதி) முதல் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயக்கப்படும்.

    இந்த ெரயில்கள், கோவை வடக்கு, துடியலூர், பெரியநாயக்கன் பாளையம், காரமடை ெரயில் நிலையங்களில் தலா ஒரு நிமிடம் நின்று செல்லும். கோவை-மேட்டுப்பாளையம் இடையே எந்த ெரயில் நிலையத்தில் ஏறி இறங்கினாலும், இந்த ெரயிலில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படும்.

    எனவே, தினசரி இந்த வழித்தடத்தில் பயணிப்போர் ரூ.185 செலுத்தி மாதாந்திர சீசன் டிக்கெட் பெற்றுக் கொண்டு, கோவை-மேட்டுப்பாளையம் இடையே பயணிக்கலாம்.

    இதுதவிர, 3 மாதங்களுக்கு சேர்த்து ரூ.500 செலுத்தி சீசன் டிக்கெட் பெற்றும் பயணிக்கலாம். சீசன் டிக்கெட் விண்ணப்ப த்துடன் ஒரு புகைப்படம், ஆதார் அட்டை நகலை அளித்தால் போதுமானது. அவர்களுக்கு அடையாள அட்டையுடன் சீசன் டிக்கெட் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×