search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடுதுறை மாயூரநாதசாமி கோவிலின் தெற்கு கோபுர வாசல் திறப்பு
    X

    கோவிலின் தெற்கு கோபுர வாசலை திருவாவடுதுறை ஆதீனம் திறந்து வைத்தார்.

    மயிலாடுதுறை மாயூரநாதசாமி கோவிலின் தெற்கு கோபுர வாசல் திறப்பு

    • கோவிலில் வருகிற செப்டம்பர் மாதம் 3-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • தொடர்ந்து, கஜ பூஜை, கோ பூஜை, குதிரை பூஜை செய்யப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ அபய பிரதாம்பிகை சமேத ஸ்ரீ மாயூரநாத சுவாமி பெரிய திருக்கோயிலில் வருகின்ற செப்டம்பர் மாதம் 3-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு திருக்கோயில் திருப்பணி பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்கு முன்பாக கணபதி பூஜை செய்து பாராம்பரியத்துடன் தெற்கு கோபுர வாசல் திறப்பு விழா 24 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து கஜ பூஜை, கோ பூஜை, குதிரை பூஜை செய்து அவ்வழியே நுழைய விட்டு கோயிலை அடைந்தது.

    இந்நிகழ்ச்சியில் பாடசாலை தலைமை குருக்கள் சிவாச்சாரியார் சுவாமிநாதன், ஆதினம் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன், காசாளர்வெங்கடேசன், விழா குழுவின் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார்உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள், ஆண்கள் பெண்கள் என திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×