search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்துப்பேட்டையில், சுங்கத்துறை அலுவலகம் திறப்பு
    X

    மறுசீரமைப்பு செய்யப்பட்ட அலுவலகத்தை திருச்சி மண்டல சுங்க இலாகா ஆணையர் அனில் திறந்து வைத்தார்.

    முத்துப்பேட்டையில், சுங்கத்துறை அலுவலகம் திறப்பு

    • அலுவலகத்திலுள்ள கோப்புகளை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • சுங்க இலாகா அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டையில் உள்ள சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.

    இதற்கு நாகப்பட்டினம் சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு இணை கமிஷனர் செந்தில் நாதன் தலைமை தாங்கினார்.

    முன்னதாக துணை சூப்பிரண்டு இன்னாசி ஆரோக்கியராஜ் அனை வரையும்வரவேற்றார்.

    கட்டிடத்தை திருச்சி மண்டல சுங்க இலாகா ஆணையர் அனில் திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து சுங்க இலாகா ஆணையர் அனில் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

    பின்னர், அலுவலகம் உள்ளே சென்று அங்கிருந்தகோப்பு களை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார்.

    இதில் சுங்க இலாகா அதிகாரிகள், அலுவலர்கள், பணியா ளர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×