என் மலர்
உள்ளூர் செய்திகள்

புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி தருமபுரி உழவர் சந்தையில் 47 டன் காய்கறிகள் ரூ. 15.54 லட்சத்திற்கு விற்பனை
- தருமபுரி உழவர் சந்தையில் 47 டன் காய்கறிகள் ரூ.15.54 லட்சத்துக்கு விற்பனை ஆனாது.
- 2000 பேர் வாங்கி சென்றனர்
தருமபுரி மாவட்டத்தில் உழவுத் தொழில் பிரதான தொழிலாக இருந்து வருகி றது. மாவட்டத்தில் கத்தரி, வெண்டை, அவரை, பூசணி, வெள்ளை பூசணி, முருங்கைக்காய், முள்ளங்கி, கோவைக்காய்,கேரட் பீன்ஸ், சுரைக்காய், புடலங் காய், பாகற்காய், கொத்த மல்லி இலை, புதினா, கருவேப்பிலை என அனைத்து வகை காய்கறிகள் மற்றும் பழ வகைகள் சாகுபடி செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் விளையும் காய்கறிகள் தருமபுரி மாவட்டம் மற்றும் வெளி மாவட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. உழவர்கள் தினசரி தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 உழவர் சந்தைகளுக்கும் தருமபுரி மாவட்ட வேளாண்துறை மூலம் காய்கறிகளை கொண்டு வந்து நேரடியாக நுகர்வோ ருக்கு விற்பனை செய்யப்ப டுகிறது.
தருமபுரி உழவர் சந்தையில் நாள் ஒன்றுக்கு 3 டன் முதல் 4 தன் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. தினந்தோறும் 2000 க்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். அந்த வகையில் பண்டிகை காலங்களில் கூடுதலாக காய்கறிகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இன்று புரட்டாசி மூன்றா வது சனிக்கிழமை என்ப தால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இந்து மக்கள் பெருமா ளுக்கு உண்டியல் வைத்து படையலிட்டு வழிபடுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று தருமபுரி உழவர் சந்தைக்கு ஏரளமா ன மக்கள் காய்கறிகளை வாங்கிச் சென்றுள்ளனர். இதில் 47 ஆயிரத்து 727 கிலோ காய்கறிகள் ரூ. 15, லட்சத்து 54 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள தாக வேளாண் துறை அதிகாரி கள் தெரிவித்தனர்.






