என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
ஓசூர் பள்ளியில் விஷவாயு பரவி மாணவர்கள் பாதிக்கப்பட்டது குறித்து விசாரணை குழு ஆய்வறிக்கையின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் -கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பேட்டி
- பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மயக்கம் அடைந்து விட்டார்கள்.
- கண்காணிப்பில் உள்ளனர். எனவே, பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை.
ஓசூர்
ஓசூரில் மாநகராட்சி அரசு பள்ளியில் விஷவாயு பரவி மாணவர்கள் பாதிக்கப்பட்டது குறித்து அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் நேற்று நேரில் நடத்திய ஆய்வுக்கு பின்னர், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓசூர் மாநகராட்சி காமராஜ் காலனியில் உள்ள அரசு நடுநிடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மயக்கம் அடைந்து விட்டார்கள்.
இந்த தகவலின் அடிப்படையில், 72 குழந்தைகள், ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 22 குழந்தைகள், பெற்றோருடன் பாதுகாப்பான நிலையில், அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 1 குழந்தை மட்டும் முன்னெச்சரிக்கையாக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் நலமுடன் உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து, ஓசூர் உதவி கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர், மாநகராட்சி ஆணையாளர், சுற்றுச்சூழல் பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விசாரணை மேற்கொள்ள ஒரு குழு அமைக்கப்பட்டு, உடனடியாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாணவர்கள் நலமுடன் உள்ளனர். உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். எனவே, பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
இந்த ஆய்வின்போது, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் கோவிந்தன், மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, சுற்றுச்சூழல் பொறியாளர் ரங்கசாமி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்