என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவராத்திரியையொட்டி மல்லிகை பூ ரூ.1600-க்கு விற்பனை
    X

    சிவராத்திரியையொட்டி மல்லிகை பூ ரூ.1600-க்கு விற்பனை

    • பழைய பஸ் நிலையத்தை யொட்டி விசாலமாக மேலும் ஒரு பூ மார்க்கெட்
    • பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனை

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.உ.சி. பூ மார்க்கெட் உள்ளது. இதைத்தவிர பழைய பஸ் நிலையத்தை யொட்டி விசாலமாக மேலும் ஒரு பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுகளுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இந்த பூ மார்க்கெட்டில் சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் தினமும் பூக்கள் வாங்கி செல்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சுபமுகூர்த்த தினம், பண்டிகை, தைப்பூசம் ஆகிய விழாக்களை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரித்தது. அப்போது ஒரு கிலோ மல்லிகை பூ கிலோ ரூ.1400-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு சேலம் பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் சற்று விலை உயர்ந்துள்ளது. மல்லிகை- ரூ. 1600, ஜாதிமல்லிகை - ரூ.1000, காக்கட்டான்- ரூ.450, கலர் காக்கட்டான்-ரூ.450 மலைக்காக்கட்டான்- ரூ.360, அரளி -ரூ.80 வெள்ளை அரளி -ரூ.80, மஞ்சள் அரளி -ரூ.80 ,செவ்வரளி-ரூ.150, ஐ.செவ்வரளி- ரூ.100, நந்தியாவட்டம் -ரூ.150, சி.நந்தியாவட்டம் -ரூ.200, சம்பங்கி-ரூ.80 சாதா சம்பங்கி-100 என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×