என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
சுதந்திர தின விழாவையொட்டி ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரியில் பட்டிமன்றம்-கலைநிகழ்ச்சிகள்
- இந்தியாவின் வளர்ச்சிக்கு விவசாயத்தின் பங்கா? தொழில்துறையின் பங்கா? என்ற தலைப்பில் கல்லூரியில் நிகழ்ச்சி நடந்தது.
- சுதந்திர உணர்வை ஊட்டும் வகையில் நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரியில் 75- ஆவது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கினார். தமிழ் துறையின் தலைவர் லட்சுமி வரவேற்புறை ஆற்றினார்.
விழாவையொட்டி, இந்தியாவின் வளர்ச்சிக்கு விவசாயத்தின் பங்கா? தொழில்துறையின் பங்கா? என்ற தலைப்பில் கல்லூரி முதல்வர் நடுவராகவும் பேராசிரியர்கள், மாணவர்களைக் கொண்டு பட்டிமன்றம் நடைபெற்றது.
கலை நிகழ்ச்சிகளாக மேலும்,சுதந்திர உணர்வை ஊட்டும் வகையில் நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சுதந்திர தினத்தை யொட்டி, கவிதை, கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில், கணினி துறைத்தலைவர் சாந்தி ஜெஸ்லெட் நன்றி கூறினார்.
Next Story






