என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு கைப்பந்தாட்ட போட்டி
- மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆடவர் கைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.
- இதனையடுத்து கைப்பந்தாட்ட போட்டிக்கு 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள நாகம் பட்டி கூட்டுச் சாலை பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ குரு கல்வி கலைக்கூடம் சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆடவர் கைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.
இப்போட்டியை குருகலைக் கல்வி கூடத்தின் உரிமையாளர்கள் காத்து வராயன், மாதம்மாள் தம்பதியினர் தலைமை வகித்து தொடக்கி வைத்தனர்.
இப்போட்டியின் விழா குழுவினர்களான பெருமாள், (பிஏ.பிஎல்), பொன்னுசாமி (எம்.எஸ்ஸி.பிஎட்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கைப்பந்தாட்ட போட்டியை மத்தூர் கலை மகள் கலாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளார் ராசேந்திரன், பள்ளியின் முதல்வர் சூரியமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தொடக்கி வைத்தனர்.
இதனையடுத்து கைப்பந்தாட்ட போட்டிக்கு 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
இப்போட்டியினை நடத்தி வெற்றி பெற்ற அணிகளுக்கு முதலாம் பரிசு, இரண்டாம் பரிசு மற்றும் மூன்று பரிசு ஆகிய மூன்று பரிசுகளையும் ஸ்ரீ குரு கல்வி கலைக் கூட நிர்வாகிகளான அரிமா அண்ணாதுரை, மேகலா ஆகியோர் வழங்கினர்.






