என் மலர்
உள்ளூர் செய்திகள்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டுபரமத்திவேலூர் பகுதி அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேம்
- அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயி அம்மன் மற்றும் மாசாணியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளை யத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயி அம்மன் மற்றும் மாசாணியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல் நன்செய் இடையாறு மகா மாரியம்மன், பரமத்திவேலூர் மகா மாரியம்மன், பேட்டை புது மாரியம்மன், பகவதியம்மன், வேலூர்- கரூர் சாலையில் உள்ள செல்லாண்டி அம்மன், பரமத்தி அங்காளம்மன், பாண்ட மங்கலம் மாரியம்மன் கோவில், பகவதி அம்மன் கோவில், கொந்தளம் மாரியம்மன் கோவில், சேளூர் மாரியம்மன் கோவில், அய்யம்பாளை யம் பகவதி அம்மன், மாரியம்மன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டி யம்மன் கோவில், வடகரை யாத்தூர் பகவதி அம்மன், மாரியம்மன் கோவில் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில் களில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடை பெற்றது.
இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






