search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆவணி அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு
    X

    அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயி அம்மன், மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

    ஆவணி அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு

    • அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    பரமத்தி வேலூர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன் ,அரசாயி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில், மகாமாரியம்மன் கோவில், திருவேலீஸ்வரர் கோவில் ,ராஜா கோவில், பரமத்தி வேலூர் மகா மாரியம்மன் கோவில், பகவதி அம்மன் கோவில், செல்லாண்டி அம்மன் கோவில், பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ,பாண்டமங்கலம் பகவதி அம்மன், மாரியம்மன் கோவில், கொந்தளம் மாரியம்மன் கோவில், சேளூர் மாரியம்மன் கோவில், குன்னத்தூர் மாரியம்மன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன் கோவில், வடகரையாத்தூர் மாரியம்மன் கோவில், பச்சையம்மன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோவில்களில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    Next Story
    ×