என் மலர்
உள்ளூர் செய்திகள்

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதி வண்டி வழங்கப்பட்டது
- அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- திமுக நிர்வாகி பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
சட்ட மேதை அம்பேத்கரின் 132வது பிறந்த தினத்தை முன்னிட்டு சோழவரம் ஒன்றியம் வெள்ளி வாயல் ஊராட்சி அடுத்த பள்ளிபுரம் அம்பேத்கர் சிலைக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திமுக நிர்வாகி வடிவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் சிறப்பு அழைப்பாளராக திமுக நிர்வாகி மனோஜ் கலந்துகொண்டு வெள்ளிவாயல் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள 8 ம் வகுப்பு 17 மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் மற்றும் பாட புத்தகங்கள் வழங்கினார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மரகதம் நடராஜன், திமுக ஊராட்சி செயலாளர் துரைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






