search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுவாணி சாலையில்  பெண்கள் திடீர் சாலை மறியல்
    X

    சிறுவாணி சாலையில் பெண்கள் திடீர் சாலை மறியல்

    • தாமதமாக வரும் அரசு பஸ் ஆலந்துறை அரசு பள்ளியில் நிற்காமல் சென்று விடுகிறது.
    • 5 அரசு பஸ்களை பேலீசார் விடுவித்தனர்.

    வடவள்ளி:

    கோவை சிறுவாணி சாலை பூலுவபட்டி பகுதியில் இன்று காலை காந்திபுரம் பகுதிக்கு வேலைக்கு செல்ல நின்று கொண்டு இருந்த சுமார்‌ 15-ற்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென அரசு பஸ்சை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, கடந்த ஒரு வாரமாக குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்கள் வருவதில்லை. இதனால் சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் 2 நாட்களாக தாமதமாக வரும் அரசு பஸ் ஆலந்துறை அரசு பள்ளியில் நிற்காமல் சென்று விடுகிறது. இதனை கண்டித்து இன்று காலை நாங்கள் சாலைமறியலில் ஈடுபட்டோம் என்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆலந்துறை போலீசார் பெண்களிடம்‌ பேச்சுவர்த்தை நடத்தினர். அதன்பின்னர் அவர்கள் சிறைபிடித்து வைத்திருந்த காந்திபுரம் நோக்கி செல்ல இருந்த 4 பஸ், சாடிவயல் செல்ல இருந்த ஒரு அரசு பஸ் உள்பட 5 அரசு பஸ்களை பேலீசார் விடுவித்தனர். இதனால் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×