என் மலர்
உள்ளூர் செய்திகள்

வனத்துறையினர் சார்பில் வேப்பனபள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்தால் அவற்றை வருகின்ற 19-ம் தேதிக்குள் வனத்துறை அல்லது ஊர் பிரமுகர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
- உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படும்.
வேப்பனபள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளியில் வனத்துறை சார்பில் கிருஷ்ணகிரி வனக்காப்பாளர் சம்பத்குமார் தலைமையில் கள்ள துப்பாக்கியை ஒழிப்போம், யானைகளை காப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வேப்பனப்பள்ளியிப் கொங்கனப்பள்ளி சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்தால் அவற்றை வருகின்ற 19-ம் தேதிக்குள் வனத்துறை அல்லது ஊர் பிரமுகர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படும். மேலும் கடுமையான நவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வனகாப்பாளர்கள் அண்ணா துரை, தேவனந்தன், வெங்கடாசலம் மற்றும் வனக்காவலர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






