search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்ட ரைபிள் கிளப் சார்பில் மாவட்ட, மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள்
    X

    தென்காசி மாவட்ட ரைபிள் கிளப் சார்பில் மாவட்ட, மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள்

    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தென்காசி மாவட்ட ரைபிள் கிளப்பின் சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
    • பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோருக்கு தேசிய கொடிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    நெல்லை தென்காசி மெயின்ரோட்டில் மேலமெஞ்ஞானபுரம் அருகே அமைந்துள்ள தென்காசி மாவட்ட ரைபிள் கிளப்பில் நடந்த விழாவில் மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தென்காசி மாவட்ட ரைபிள் கிளப்பின் சார்பாக சான்றிதழ்களையும், பதக்கங்களையும் செயலாளர் ஜே எம். ரஷீத் வழங்கி மாணவர்களை வாழ்த்தினார். மேலும் கிளப்பின் சார்பாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோருக்கு தேசிய கொடிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    செயலாளர் ஜே.எம்.ரஷீத் கூறுகையில் 9 வயது முதல் 90 வயது வரை இங்கு பயிற்சி எடுக்கலாம். மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் மாணவர்களை உருவாக்கி வருகிறோம் என்று கூறினார். தற்பொழுது உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருப்பதால் ஆர்வமுள்ள மாணவ மாணவிகளும், பெரியோர்களும் சேர்ந்து பயன் பெறலாம் என்றும் கூறினார்.

    விழாவில் கிளப்பின் இலஞ்சி டி.ஆர். ராஜேந்திரன், உறுப்பினர்கள் பொதிகை சில்க்ஸ் மகுது மீரான், இலஞ்சி பிச்சையா, டேலிஸ் வாட்டர் முகைதீன், மணிகண்டன், ஜேசு ரூபன், சசிகுமார், வனத்துறை மாரியப்பன், இந்தியன் ரெயில்வே தங்க மாரியப்பன், வழக்கறிஞர்கள் சிவா மற்றும் மூர்த்தி, டாக்டர் ஹாஜா, ஜெயராஜ், செல்சிட்டி பாலு மற்றும் மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை செயலாளர் ஜே.எம். ரஷீத் செய்திருந்தார்.

    Next Story
    ×