search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு 10-ந் தேதி சைக்கிள் போட்டி
    X

    அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு 10-ந் தேதி சைக்கிள் போட்டி

    • முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் சைக்கிள் போட்டி 10 -ந்தேதி நடைபெறுகிறது.
    • வயதுச் சான்றினை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்று வருதல் வேண்டும்.

    கடலூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 15- ந்தேதி பள்ளிகளில் பயிலும் மாணவ , மாணவிகளுக்கு நடத்தப்படும் சைக்கிள் போட்டி வருகிற 10 -ந்தேதி காலை 7 மணிக்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி நடைபெறும்.

    வயதுச் சான்றினை பள்ளித் தலைமை ஆசிரி யரிடம் இருந்து பெற்று வருதல் வேண்டும். இதற் கான நுழைவுப் படிவத்தி னை மாணவர்களுக்கு தனி யாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் கொண்டு வருதல் வேண்டும். போட்டி களில் கலந்து கொள்ள பய ணக்கட்ட ணம், தினப்படி வழங்கப்பட மாட்டாது. ஆனால் முதல் 10 இட ங்களில் வெற்றி பெறு வோருக்கு பரிசுகளும், சான்றி தழ்களும் வழங்கப்ப டும். போட்டிகளில் கலந்து கொள்வோர் சாதாரண சைக்கிள் தாங்களே கொண்டு வரு தல்வேண்டும். போட்டி களில் கலந்து கொள்வோர் போட்டி தொடங்குவதற்கு 1 மணி நேரம் முன்னரே வருகை தந்து, போட்டி நடைபெறும் இடத்தில் உரிய சான்றுகளை வழங்கி, பதிவு எண் பெற்று, தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். போட்டியின்போது ஏற்படும் விபத்து அல்லது அசம்பா விதங்களுக்கு பங்கு கொள்ளும் நபரே பொறுப் பேற்க வேண்டும்.

    இதற்கான எழுத்து மூல மான ஒப்புதலை மாவட்ட விளையாட்டு அலு வல ரிடம் ஒப்படைத்த பின்னரே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். எனவே மாணவ-மாணவி கள் மிகவும் பொறுப்பு டன் நடந்து கொள்ள வேண்டும். போட்டி யில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் தங்கள் பெயர்களை 9- ந்தேதி மாலை 5 மணிக்குள் அண்ணா விளையாட்டு அரங்க த்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பால சுப்ர மணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளார்.

    Next Story
    ×