என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பள்ளிபாளையம் அருகே மூதாட்டி கொலைமர்ம நபர்களை பிடிக்க தனிப்படை தேடுதல் வேட்டை
- ராமசாமி என்பவரின் மனைவி பாவாயி (வயது 60) ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கடந்தார்.
- தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள முருங்கைக்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி. இவரது கரும்பு தோட்டத்தில் நேற்று ஓடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவி பாவாயி (வயது 60) ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கடந்தார்.
தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட பாவாயிக்கு அவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
கணவரும், மகனும் இறந்துவிட்ட நிலையில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் இவர் வேலை செய்து வந்ததும், ஞாயிற்றுக்கிழமைகளில் அடுப்புக்கு தேவையான தென்னை மட்டைகள் விறகுகளை சேகரித்து வருவதற்காக கரும்பு தோட்டங்கள் நிறைந்த மூக்கு பாறை பகுதிக்கு இவர் சென்று வருவது வழக்கம் என்பதும் தெரியவந்தது.
இதே போல் நேற்று விறகு சேகரித்து வருவதற்காக வீட்டில் இருந்து சென்ற போது மர்ம நபர்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து தப்பி ஓடியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அவரது கையில் தங்க வளையல் இருந்தபோதிலும் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை காணவில்லை. இதனால் மர்ம நபர்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு கழுத்தில் கலந்த செயலை பரிசு சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சந்தேகத்தின் பேரில் 3பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்