search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் மீன் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை
    X

    ஓசூரில் மீன் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை

    • 12.5 கிலோ எடையிலான ரசாயன மீன்களை பறிமுதல் செய்து குழி தோண்டி அதில் கொட்டி அழித்தனர்.
    • கெட்டுப்போன மீன்களையோ விற்கக் கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து சென்றனர்.

    ஓசூர்,

    ஓசூர் பகுதிகளில் உள்ள மீன் கடைகளில் ஃபார்மலின் என்ற ரசாயனம் கலந்த மீன்கள் மற்றும் கெட்டுப்போன மீன்கள் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிருஷ்ணகிரி மீன் துறை உதவி இயக்குனர் மற்றும் மீன்வள சார் ஆய்வாளர் ஆகியோருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

    இந்த புகார்களின் அடிப்படையில், நேற்று ஓசூர் மீன்வள சார் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் அதிகாரிகள் ஓசூர் பகுதிகளில் உள்ள பல்வேறு மீன் கடைகளில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது மீன் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல வகையான மீன்களை ஆய்வு செய்த அதிகாரிகள் அதனை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் அந்த நீரை ஃபார்மலின் கிட் மூலம் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையின் போது ஃபார்மலின் ரசாயனம் கலந்து விற்பனை செய்ததாக 2 மீன் கடைகாரர்களை எச்சரித்த அதிகாரிகள், அவர்களிடமிருந்து 12.5 கிலோ எடையிலான ரசாயன மீன்களை பறிமுதல் செய்து குழி தோண்டி அதில் கொட்டி அழித்தனர்.

    ஓசூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மீன் கடைகளில் ஆய்வு செய்த அதிகாரிகள் மீன் வியாபாரம் செய்யும் கடைக்காரர்கள் ரசாயனம் கலந்த மீன்களையோ அல்லது கெட்டுப்போன மீன்களையோ விற்கக் கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து சென்றனர்.

    Next Story
    ×