search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்தலசயன பெருமாள் கோயில் காணிக்கை எண்ணுவதில் குளறுபடி- சர்ச்சையில் அதிகாரிகள்
    X

    ஸ்தலசயன பெருமாள் கோயில் காணிக்கை எண்ணுவதில் குளறுபடி- சர்ச்சையில் அதிகாரிகள்

    • உண்டியல் பணம் 3.91லட்சம் ரூபாய் என மட்டுமே தெரிவித்தனர்.
    • மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் தற்போது அதிகரித்து வரும் இந்த நேரத்தில் உண்டியல் பணம் குறைந்துள்ளது.

    மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு இதுவரை அறங்காவலர் குழு கிடையாது.

    தெப்பத் திருவிழா நடத்துவதற்காக அந்த நேரத்தில் மட்டும் தெப்ப உச்சவ கமிட்டி என ஒரு குழு அமைக்கப்படும். ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் கோயில் உண்டியல் பணம் என்னும்போது இவர்களை அழைப்பதில்லை என்ற சர்ச்சை ஏற்கனவே இருந்து வந்தது.

    இந்த நிலையில் செங்கல்பட்டு இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் பாஸ்கரன், கோயில் செயல் அலுவலர் சரவணன் முன்னிலையில் வெளியூரை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற பேங்க் ஊழியர்களை வைத்து உண்டியல் காணிக்கை என்னப்பட்டது.

    இதில் கோயில் தெப்ப உச்சவ கமிட்டியினரையோ, போலீசாரேயோ, வருவாய் அலுவலரையோ, ஆன்மீக நபர்களையோ நிர்வாகம் கூப்பிடவில்லை. உண்டியல் பணம் 3.91லட்சம் ரூபாய் என மட்டுமே தெரிவித்தனர்.

    தற்போது சிசிடிவி கேமரா இல்லாமல் கோயிலில் பணம் எண்ணியதும், யாரையும் அழைக்காமல் தன்னிச்சையாக கோயில் நிர்வாகம் செயல்பட்டதும், கடந்த எண்ணிக்கை காலத்தில் தங்கம், வெள்ளி உட்பட 5 லட்சம் குறையாமல் காணிக்கை இருந்து வந்த நிலையில், மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் தற்போது அதிகரித்து வரும் இந்த நேரத்தில் உண்டியல் பணம் குறைந்தது சந்தேகத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×