என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில்  ரூ.39 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்   அதிகாரிகள் ஆய்வு
    X

    வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    கொடைக்கானலில் ரூ.39 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் அதிகாரிகள் ஆய்வு

    • கொடைக்கானலில் ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டு தற்போது ரூ.39 கோடி மதிப்பில் நகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
    • திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் பல்வேறு நகராட்சி வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நகராட்சிகள் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார் ஆகியோர் விடுத்த கோரிக்கையை ஏற்று ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டு தற்போது ரூ.39 கோடி மதிப்பில் நகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    கொடைக்கானல் நகராட்சி அண்ணா சாலைப்பகுதியில் தினசரி காய்கறி சந்தை வளாகம், அரசு ஆஸ்பத்திரி, கிளை கட்டிடம், ஏரிச்சாலையைச் சுற்றி சுற்றுலா பயணிகளை கவரும் விதமான நவீன டைல்ஸ் பதிக்கும் பணிமற்றும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணி, ஆனந்தகிரி பகுதியில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நூலகம்,

    ஏரிச்சாலை, அண்ணா சாலை, நாயுடுபுரம் போன்ற பகுதிகளில் பயோமெட்ரிக் முறை மற்றும் சிறுவர் சிறுமிகள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் நவீன வசதிகளிடம் கூடிய 4 கழிப்பறைகள், ஆனந்தகிரி பிரெஞ்ச்லேண்ட் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம், அப்சர்வேட்டரி வி.ஜி.பி.குடியிருப்பு பகுதிக்குள் 2 நவீன பூங்காக்கள்,

    கொடைக்கானல் கல்லறை மேடு பகுதியில் உள்ள மின் மயானத்தில் எல்.பி.ஜி கேஸ் பயன்படுத்தும் நவீன எந்திரம் பொருத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வருதல், பிரகாசபுரம் குப்பைகள் சேமிப்புக்கிடங்கு பகுதியில் குப்பைகளை மறுசுழற்சி செய்து மின்சாரம் தயாரித்து தெரு விளக்குகளுக்கு பயன்படுத்துவது, பயோ கேஸ் தயாரித்தல், மறுசுழற்சியில் நவீன உரம் தயாரிக்கும் பணி,

    அப்சர்வேட்டரி குடிநீர் தேக்க துணை அணையின் விரிவாக்கம் மற்றும் மறு சீரமைப்பு கட்டிடப்பணி ஆகிய திட்டங்களுக்கென ரூ.39 கோடி விடுவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த பணிகளை நகராட்சிகள் நிர்வாகத்துறை இயக்குநர் பொன்னையா அறிவுறுத்தலின்படி நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குனர் சரவணன், மண்டல தலைமை செயற்பொறியாளர் மனோகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் நாராயணன், நகராட்சி பொறியாளர் முத்துக்குமார், உதவிப்பொறியாளர் செல்லத்துரை மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×