search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யானை தாக்கி பலியானவரின்  குடும்பத்திற்கு மதியழகன் எம்.எல்.ஏ. ஆறுதல்
    X

    யானை தாக்கி பலியானவரின் குடும்பத்திற்கு மதியழகன் எம்.எல்.ஏ. ஆறுதல்

    • கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
    • முன்பணமாக ரூ.50 ஆயிரத்தை மாவட்ட வனத்துறை மூலமாக பெற்று ராம்குமாரின் குடும்பத்திற்கு வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போச்சம்பள்ளி ஒன்றியம் செல்லக்குட்டப்பட்டி ஊராட்சி புகம்பட்டியில் ராம்குமார் என்பவர் நேற்று யானை தாக்கி இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ.நேற்று நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

    தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். மேலும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் ரூ.5 லட்சம் நிதியுதவியில் முன்பணமாக ரூ.50 ஆயிரத்தை மாவட்ட வனத்துறை மூலமாக பெற்று ராம்குமாரின் குடும்பத்திற்கு வழங்கினார். அப்போது தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×