search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவி பெட்டகம்
    X

    காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவி பெட்டகம் வழங்கப்பட்டது.

    ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவி பெட்டகம்

    • ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் காசநோய் ஒழிப்பு மற்றும் தொற்றாளர் நலக் கூட்டமைப்பு சார்பாக காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவிப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 16-க்கும் மேற்பட்ட பொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் காசநோய் ஒழிப்பு மற்றும் தொற்றாளர் நலக் கூட்டமைப்பு சார்பாக காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவிப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சிக்கு நம்பிக்கை மைய ஆற்றுநர் கண்ணன் வரவேற்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குனர் (பொறுப்பு) சந்தரி பிரியா தலைமை தாங்கி சிறப்புரை யாற்றினார். ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி முதன்மை மருத்துவ அலுவலர் அரவிந்த் நாராயணன், திண்டுக்கல் லயன்ஸ் கிளப் சவுந்தரராஜன், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு மாவட்ட மேற்பார்வை யாளர் ஜெசிந்தா, அச்சாணி தன்னார்வ அமைப்பாளர் ஆசிரியர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்து கருத்துரையாற்றினர்.

    ஊட்டச்சத்து நல உதவிப் பெட்டகத்தில் சுண்டல், பாசிப்பயிறு, பேரிச்சம்பழம், முட்டை, வரகு அரிசி, நிலக்கடலை பருப்பு, மலை நெல்லிக்காய், கடலை மிட்டாய் உட்பட 16-க்கும் மேற்பட்ட பொருட்களும், தன்சுத்த கிட் பேக்கில் நகவெட்டி, வாஷிங் சோப்பு, வாட்டர் பாட்டில், கபசுர குடிநீர் பொடி, தாளிசாதி மற்றும் கறிவேப்பிலை பொடி உள்ளிட்ட பொரு ள்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. தொற்றா நோய் பிரிவு செவிலியர் நித்யா மற்றும் சரண்யா தேவி பயனாளிகளுக்கு சிற்றுண்டி வழங்கினர்.

    இதில் காசநோய் பிரிவு யூஜின் குமார், ஜான் ஜாய்ஸ், பாலசுப்ரமணியன், கார்த்திகாதேவி, மரிய மெரினா, ஆய்வக நுட்புணர் கவுசல்யா ஆகியோர் கலந்து கொண்டனர். காசநோய் பிரிவு பாண்டியராஜன் நன்றி கூறினார்.

    Next Story
    ×