search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
    X

    கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

    • சத்துணவு ஊழியர்களுக்கு, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.
    • குடும்ப பாதுகாப்பான ஓய்வூதியம் வழங்கவேண்டும்.

    தருமபுரி,

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்ட ஆயத்த மண்டல கூட்டம், தருமபுரி சிஐடியு அலுவலகத்தில், நடந்தது.

    மாவட்ட தலைவர் காவேரி தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் தேவகி, மாநில துணைத்தலைவர் மஞ்சுளா, மாநில செயலாளர் மகேஸ்வரி, சிஐடியு மாநில செயலாளர் நாகராசன், ஜாக்டோ - ஜியோ நிதிகாப்பாளர் புகழேந்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில செயலாளர் லில்லிபுஷ்பம், மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணகிரி மணி, நாமக்கல் கோமதி, மாவட்ட செயலாளர்கள் சாந்தி, நாமக்கல் தங்கராஜ், சேலம் அமராவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    30 ஆண்டுகாலமாக பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். குடும்ப பாதுகாப்பான ஓய்வூதியம் வழங்கவேண்டும். தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை சத்துணவுடன் இணைக்கவேண்டும்.

    தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை தமிழக முதல்வர் நிறைவேற்றவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில், ஜூன் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 72 -மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

    இந்த உண்ணாவிரதப ்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சத்துணவு ஊழியர்கள் பெருந்திரளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மாவட்ட பொருளாளர் வளர்மதி நன்றி கூறினார்.

    Next Story
    ×