search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.

    நத்தத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாருக்கு வழங்கக் கூடாது. சத்துணவு ஊழியர்களுக்கே வழங்க வேண்டும்.
    • சங்க நிர்வாகிகள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் ராமநாதன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் கந்தசாமி, மாவட்ட இணைச் செயலாளர் பாண்டிச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாருக்கு வழங்கக் கூடாது. சத்துணவு ஊழியர்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது. முன்னாள் தலைவர் குப்பான் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரி நன்றி கூறினார்.

    Next Story
    ×