என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு
- மாணவர்களை கையாளும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் நடைபெற்று வருகிறது.
- ஒருங்கிணைத்து கற்றல் உபகரணங்களை உருவாக்கி மாணவர்களின் கற்றலை மேம்படுத்திட வேண்டும்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்தில் உள்ள 177 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரியின் உத்தரவின் பேரில் 4,5-ம் வகுப்பு மாணவர்களை கையாளும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் நடைபெற்று வருகிறது.
இதன் முதற்கட்ட தொடக்கமாக சூளகிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் சூளகிரி ஒன்றியத்தை சேர்ந்த தொடக்க, நடுநிலை பள்ளியை சேர்ந்த 240 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு ஆகிய பாடங்களில் மாணவர்களின் கற்றல் திறனை புரிதலோடு மேம்படுத்தும் வகையில் செயல்பாடுகளை வடிவமைத்து பயிற்சியினை வழங்கி வருகின்றனர்.
பயிற்சியினை ஒசூர் மாவட்டக் கல்வி அலுவலர் முனிராஜ், சூளகிரி வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாதேஷ், வெங்கட் குமார், ஜார்ஜ், இந்திரா ஆகியோர் பார்வையிட்டு பாட புத்தகம், பயிற்சி புத்தகம், ஆசிரியர் கையேடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து கற்றல் உபகரணங்களை உருவாக்கி மாணவர்களின் கற்றலை மேம்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்தினர். பயிற்சிக்கான ஏற்பாட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சண்முக பிரியா செய்து வருகிறார். இதில் பொருப்பாளர் வெங்கடேசன், ஆசிரியர் பயிற்றுனர் வைத்தியநாதன், வெங்கடேஷ், குமார், சங்கரன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்